லஹாட் டத்துவிலுள்ள ஜாவா கிராமம் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 6.30 மணியளவில் 51 வயது முதியவர் தனது கோழிப்பண்ணையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அந்தக் குழந்தையைக் கண்டார் என்று, லஹாட் டத்து மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் டாக்டர் ரோஹன் ஷா அஹ்மட் கூறினார்.
“புதிதாக பிறந்த குழந்தை, கிராமத்தில் வசிப்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் ஆடை இல்லாமல் கிடந்ததாக நம்பப்படுகிறது.
“மூன்று கிலோகிராம் எடையுள்ள குழந்தை மேல் சிகிச்சைக்காக லஹாட் டத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் சந்தேக நபரை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருவதாகவும், தகவல் தெரிந்த பொதுமக்கள் லஹாட் டத்து IPD ஹாட்லைன் 089-881255 என்ற எண்ணிலோ அல்லது வழக்கின் விசாரணை அதிகாரி சோபியா தாமஸ் கசாவ்வை 013-9392505 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.