கெமாமன் நெடுஞ்சாலை விபத்தில் தம்பதிகள் பலி, பிள்ளைகள் இருவர் பலத்த காயம்

கோலா திரெங்கானு: கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 2 (LPT2) இன் KM267.2 இல் கெமாமனிலுள்ள ஜபோர் வெளியேறும் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்தனர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

முகமட் ரிதுவான் முகமட் யாக்கோப் மற்றும் அவரது மனைவி ஜாஹிதா ஹனிசா முகமட் (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது பிள்ளைகள் முஹமட் உவைஸ் வஃபியுதீன், 8, மற்றும் ரௌததுல் கைரா, 3, ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை (ஜூன் 17) மாலை 4.14 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததாகவும், செனே தீயணைப்பு நிலையத்தில் இருந்து எட்டு தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் திரெங்கானு மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“விபத்தில் வேறு எந்த வாகனமும் சிக்கவில்லை, விபத்துக்குரிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

“காயமடைந்த இரண்டு பிள்ளைகளும் கெமாமன் மற்றும் குவாந்தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here