பழம்பெரும் மலையாள நடிகர் பூஜாபுரா ரவி கேரளாவில் இன்று மரணம் அடைதார். இவர் மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
.’கல்லன் கப்பலில் தானே’, ‘ரவுடி ராமு’, ‘ஒர்மாக்கல் மரிக்குமோ’, ‘அம்மினி மம்மவன்’, ‘முத்தாரம்குன்னு பி.ஓ.’, ‘மழ பெய்யுனு மத்தளம் கொட்டுனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள கப்பி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பூஜாபுரா ரவி, சில மாதங்களுக்கு முன்பு இடுக்கி மறையூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக பூஜாபுரா ரவி உயிரிழந்தார். அவருக்கு வயது 83. பூஜாபுரா ரவி மறைவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகினரும், இரங்கல் தெரிவித்து உள்ளனர்.