மக்களவை தலைவராக வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் நாளை பதவியேற்பு

டான்ஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் மக்களவை தலைவராக  திங்கட்கிழமை (ஜூன் 19) பதவியேற்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது நியமனம் பிரதமர் துறையால் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவிடம் மூன்று நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றதாக கூறினார்.

அரசாங்கத்திலிருந்து நான் மட்டுமே வேட்பாளராக இருந்ததால் வேறு எந்த வேட்புமனுவும் இல்லை. நான் சனிக்கிழமை (ஜூன் 17) நாடாளுமன்ற செயலாளரைச் சந்திக்க கோலாலம்பூருக்குச் சென்றேன்.

சரவாக் மாநில ஒளிபரப்பு சேனல் டிவிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது போல், “சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மிகச்சரியாக செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நான் நேற்றிரவு ஒரு சந்திப்பை நடத்தினேன் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கூறினார்.

வியாழனன்று (ஜூன் 15) பதவிக்காலம் முடிவடைந்த டான்ஸ்ரீ ரைஸ் யதிமுக்குப் பதிலாக வான் ஜுனைடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2008 முதல் 2013 வரை மக்களவை துணை சபாநாயகர் உட்பட முந்தைய நிர்வாகங்களின் கீழ் பல முக்கிய அமைச்சரவை பதவிகளை வகித்துள்ளார்.

1990 முதல் 2004 வரை பாடாங் லுபார் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். வான் ஜுனைடி 2008 பொதுத் தேர்தலில் சாந்துபோங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று 2022 வரை அதன் நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தார். 15ஆவது பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here