கோலா சிலாங்கூர்: கம்போங் அசாம் ஜாவாவில் உள்ள ஆதிமியாதி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் (SMI) மொத்தம் 13 மாணவிகள் இன்று பள்ளியின் விடுதிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் அதே கட்டிடத்தில் உள்ள அறையில் இருந்த 21 வயது பெண் வார்டனின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது சூராவ், நூலகம் மற்றும் சிறிய அறை இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
காலை 4.30 மணியளவில் சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 12 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கைகளின் துணை இயக்குநர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.
“மேலும் ஆய்வு செய்ததில், தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது மற்றும் பள்ளி விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மாடி வகுப்பு A மாடி கட்டிடம் அழிக்கப்பட்டது.
“தீ விபத்தில் குறித்த 80 விழுக்காடு அழிவை உள்ளடக்கியது மற்றும் இன்று காலை 5.03 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, பாதிக்கப்பட்ட அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.