சாலை விபத்தில் லோரி ஓட்டுநர் பலி

லுண்டு, கெலாவ் சாலைச் சந்திப்பில் வேன் மற்றும் லோரியை உட்படுத்திய சாலை விபத்தில், லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர் அஜீருல் ஷம்சுல் தாஹிர் என்பவர் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் வேன் ஓட்டுநர் சின் காய் யியுவுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் மாநில செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நண்பகல் 12.10 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே லுண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று, அவர் கூறினார்.

“அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, வேனில் இருந்த பாதிக்கப்பட்டவர் தானாக வெளியே வந்திருந்தார் என்றும், ​​பாதிக்கப்பட்ட ஆடவர் லோரியில் சிக்கிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று, அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here