15 வயது உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று குற்றச்சாட்டுகளில், ஒரு முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பெசுட், தெரெங்கானுவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

2019 மார்ச் நடுப்பகுதியிலும், மார்ச் 31 மற்றும் அந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் ஒரு வீட்டில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹக்கீம் அஹ்மத் ஃபத்லி, RM15,000 ஜாமீனுடன் தண்டனையை நிறுத்திவைக்க அனுமதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here