வரும் 6 மாநில தேர்தல்களில் போட்டியிட தேசியமுன்னணியின் (BN ) உறுப்புக்கட்சிகளான மசீச (MCA), மஇகா (MIC) கட்சிகளுக்கு நிச்சயம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என, தேசியமுன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.
மாநிலத் தேர்தலில் BN-ன் சில உறுப்புக் கட்சிகள் ஓரங்கட்டப்படும் என்ற ஊகங்களுக்கு அவரது அறிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்று தான் நம்புவதாக துணைப் பிரதமராக இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.
“மேலும் BN உறுப்புக் கட்சிகளில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு இந்த உறுதிமொழியை நான் வழங்க விரும்புகிறேன்,” என்று இன்று TVET MADANI போர்ட்டலைத் தொடங்கிய பின்னர் UMNO தலைவருமான அவர் நிருபர்கள் கூறினார்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களுக்கு வரும் வாரங்களில் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் சிலாங்கூரில் போட்டியிடுவதற்குத் தனது கட்சிக்கு இடஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.