கோலாலம்பூர், பிப்ரவரி 28 :
ஃபெல்டா தேர்சாங் 1, 2 மற்றும் 3, முக்கிம் பத்து தாலம், ரவூப், பகாங் ஆகிய இடங்களில் அமலிலுள்ள மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKPD) அட்டவணைப்படி இன்றோடு முடிவடைகிறது.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முஹமட் சாட் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் நிலவரங்கள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் (MOH) பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கடந்த பிப்ரவரி 2 முதல் அமல்படுத்தப்பட்டது.
மேலும் புதிதாக எந்தப் பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவோ அல்லது நீட்டிக்கப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.