சிரம்பானிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் காயங்களுடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

சிரம்பானிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே, ஜாலான் டோமன் 8ல், உடலில் பல இடங்களில் காயங்களுடன், ஆண் ஒருவரது சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

காலை 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், முதுகில் இரத்தக் கறையுடன் 39 வயதுடைய நபரின் சடலம் கிடந்தது என்று, சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அரிபாய் தாராவே கூறினார்.

உயிரிழந்த நபரின் அடையாளத்தை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என்றும், சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருகிறது என்றும் கூறினார்.

“சிரம்பான் மாவட்ட தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த தகவலின் பேரில், காவல்துறை அவ்விடத்திற்கு சென்றது, அங்கு சென்றபோது ஒருவர் காயங்களுடன் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டதாகவும் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பலியானவர் 39 வயதுடையவர் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது உறுதிசெய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடைகளை ஆய்வு செய்ததில், அந்த நபரின் உடைமைகள் இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது.

“முதற்கட்ட பரிசோதனையில், முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இதுவரை மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

“உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் (HTJ) தடயவியல் மருத்துவத் துறைக்கு அனுப்பப்பட்டது.

இருப்பினும், இதுவரை இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக (SDR) வகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

அந்த இடத்தில் உடல் வீசப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலான குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, முதலில் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகளுக்காக காவல்துறை காத்திருப்பதாக  அரிபாய் வலியுறுத்தினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் “தகவல் தெரிந்தவர்கள் 0127702282 அல்லது IPD Seremban 066033222 என்ற எண்ணில் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆதி குசைனி சரிபுதினை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here