பூலாவ் மேரம்போன் அருகே இன்று காலை மின்னல் தாக்கியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.
காலை மழை பெய்து கொண்டிருந்தபோது, நண்டு பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட வலையை எடுப்பதற்காக குறித்த வாலிபரும் அவரது தந்தையும் படகில் ஏறியுள்ளனர்.
நண்டு பிடிப்பதற்காக நேற்று போட்ட வலையை இழுப்பதற்கு, இன்று காலை 8.15 மணியளவில் இருவரும் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது என்று, இஸ்கண்டார் புத்திரி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரஹ்ம ஆரிஃபின் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் 60 வயதான தந்தை காயமடையவில்லை, ஆனால் படகு இயந்திரத்திற்கு அருகில் படகின் முனையில் தூக்கி எறியப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும், வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.