தாப்பா:
ஜாலான் பிடோர்-தெலுக் இந்தான் சுரங்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற 40 வயதுடைய நபர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீன்பிடிக்கச் சென்றபோது ஒருவர் காணாமல் போனதாக, இன்று மதியம் 1.33 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தமக்கு தகவல் கிடைத்தது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில இயக்குநர் சயானி சைடன் கூறினார்.
தகவல் கிடைத்ததும், பிடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“குப்பை கொட்டும் பகுதிக்கு அருகில் உள்ள சுரங்கத்தில் மீன் பிடிக்க கீழே இறங்கிய போது, பாதிக்கப்பட்டவர் தனியாக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
“இருப்பினும் இதுவரை பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.