மைவாட்ச் தலைவரின் வழக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்

புத்ராஜெயா: மலேசிய குற்ற கண்காணிப்பு பணிக்குழுவின் (மைவாட்ச்) முன்னாள் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்  குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (POCA) இன்  16 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டது கீழ் சட்டவிரோதமானது என  அறிவித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காவல்துறை மற்றும் அரசு கொண்டு வந்த மேல்முறையீட்டில் செப்டம்பர் 15ஆம் தேதி தீர்ப்பை வழங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ சஞ்சீவனின் சட்டத்தரணி எஸ். பிரேகாஸ், பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது, ​தீர்ப்பிற்கான தேதியை உறுதிப்படுத்தினார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த உதவிப் பதிவாளர் நூர் அடிலா ஹலிட் முன் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தைத் தொடர்ந்து முடிவு தேதி நிர்ணயிக்கப்பட்டது.

ஜூன் 21 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் நீதிபதிகள் டத்தோ எஸ். நந்த பாலன், டத்தோ சீ மீ சுன் மற்றும் டத்தோ அசிமா ஓமர் ஆகியோர் மேல்முறையீட்டை விசாரித்து, தங்கள் முடிவை ஒத்திவைத்தனர்.

ஸ்ரீ சஞ்சீவன், 38, விசாரணை அதிகாரி ஏஎஸ்பி பூன்னம் இ கெலிங், இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) மற்றும் மலேசிய அரசு மீது வழக்குத் தொடர்ந்தார். தன்னை  ஜூலை 10 முதல் 26, 2016 வரை 16 நாட்கள் தவறாக காவலில் வைத்திருந்ததோடு அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

குற்றத்தடுப்பு ஆர்வலர் தனக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு கோரினார். கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் பாச்சே, ஸ்ரீ சஞ்சீவனின் பொய்யான சிறைத் தண்டனைக்கான சிவில் வழக்கை அனுமதித்து, அவருக்கு பொதுவான, முன்மாதிரியான மற்றும் மோசமான நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். சேதங்களை பின்னர் ஒரு தனி விசாரணையில் மதிப்பிட உத்தரவிட்டார்.

ஸ்ரீ சஞ்சீவனின் தடுப்புக் காவல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 5(1) வது பிரிவின் கீழ் அவரது உரிமைகள் பூன்னத்தால் மீறப்பட்டதாகவும் நீதிபதி அறிவித்தார்.

ஸ்ரீ சஞ்சீவனை சட்டவிரோதமாக காவலில் வைத்ததற்கு பூன்னம் பொறுப்பு என்று நீதிபதி அஹ்மட் கண்டறிந்தார்: மேலும் பூன்னத்தின் நடவடிக்கைகளுக்கு ஐஜிபி மற்றும் அரசாங்கம் இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஜூலை 10, 2016 அன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஸ்ரீ சஞ்சீவன் POCA இன் கீழ் கைது செய்யப்பட்டார். மறுநாள் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார், அவர் 21 நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

21 நாள் தடுப்புக் காவல் காலம் முடிவதற்குள், ஸ்ரீ சஞ்சீவன் தன்னை காவலில் இருந்து விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். POCA இன் கீழ் ஒரு கட்டாய நடைமுறையை மீறியதால், உயர் நீதிமன்றம் ஜூலை 26, 2016 அன்று அவரது விண்ணப்பத்தை அனுமதித்தது.

அரசாங்கம் பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மேல்முறையீடு திரும்பப் பெற்றது. பின்னர் ஸ்ரீ சஞ்சீவன் தன்னை சிறையில் அடைத்ததற்காக காவல்துறை மற்றும் அரசு மீதும் வழக்கினை தாக்கல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here