இந்த வாரம் கோத்தா கினாபாலு மற்றும் பிற மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் உட்பட போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை சபா போலீசார் கைது செய்துள்ளதுடன், RM8 இலட்சம் மதிப்புள்ள சியாபுவைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அவற்றில் பல சொகுசு வாகனங்கள், டிசைனர் கைப்பைகள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஏராளமான நகைகள் மற்றும் ரொக்கம் என்பவை அடங்கும், இவை அனைத்தும் மொத்தம் RM1.2 மில்லியன் மதிப்புள்ளவை என்றும் அவர் கூறினார்.
“இந்தக் கும்பல் சில மாதங்களாகவே செயற்பட்டு வருவதாக அவர்கள் கூறினாலும், விசாரணைகளை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது, நீண்ட காலமாக அதைச் செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்று சபா காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 3) காலை 11.45 மணியளவில் ஜாலான் சண்டாக்கான்-லஹாட் டத்தோ என்ற இடத்தில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும், அவர் 10.5 கிலோ சியாபுவுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறினார்.
ஜாலான் சண்டாகான்-லாஹாட் டத்துவின் 68-வது கிலோமீட்டர், செம்போர்னா மற்றும் துவாரான் ஆகிய மூன்று வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.