பல முறை துப்பாக்கி சூடு நடத்தியதால் பீதியடைந்த குடும்பம்; கோத்த பாருவில் சம்பவம்

கோத்த பாரு,  கோக் லானாஸ் கம்போங் குன்டாங்கில் உள்ள ஒரு அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (ஜூலை 7) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் அவர்களின் வீடு மீது மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பீதியடைந்தனர்.

கோத்த பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி டாவூட் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரவு 11.59 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

இந்த வீடு அரசு ஊழியரான ஒருவருக்கு சொந்தமானது.அவர் தனது குடும்பத்துடன் அங்கு வசிக்கிறார். வீடு மற்றும் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் பல துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களைக் கண்டறிந்தோம் என்று அவர் இன்று (ஜூலை 8) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக ஏசிபி முகமது ரோஸ்டி தெரிவித்தார். சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ஏஎஸ்பி முகமட் ரிதுவான் இஸ்மாயிலை 019-245 4224 அல்லது 09-775 2200 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 மற்றும் ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 39 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here