குளுவாங்கில் விடுதி ஊழியர் ஒருவரிடம் ஆயுதமேந்திக் கொள்ளை..!

குளுவாங்கின் ஜாலான் சுல்தானாவில் உள்ள, கடந்த புதன்கிழமை ஒரு பட்ஜெட் விடுதி கவுண்டரில் நடந்த சம்பவத்தில், ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு ஆண்களுடன் போராடியதில் ஒரு விடுதியின் பெண் ஊழியருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அதிகாலை 12.55 மணியளவில் நடந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முஹமட் நோஹ் தெரிவித்தார்.

“சந்தேக நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவருடன் பேச கவுண்டரை அணுகினார். இரண்டாவது சந்தேக நபர் பின்னர் உள்ளே வந்தார், குறித்த பெண் தனது மொபைல் போனை எடுத்த சந்தேக நபர்களுக்கு எதிராக போராட முயற்சிக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு இடது கையில் காயங்கள் ஏற்பட்டன” என்று அவர் நேற்று சனிக்கிழமை (ஜூலை 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து முதலாளியின் பணத்தில் RM350 ஐ எடுத்துக் கொண்டு, வெள்ளை தோயோத்தா வியோஸில் தப்பித்ததாக அவர் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க வழிசெய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here