புத்ராஜெயா: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க்கை வெள்ளிக்கிழமை (ஜூலை 14) சந்திக்கிறார். எப்போது பேசுவீர்கள் என்று கேட்டபோது, ”நாளை,” பிரதமர் சுருக்கமாக கூறினார்.
வியாழன் (ஜூலை 13) புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) அமலாக்க நிறுவனங்களுடனான உரையாடல் அமர்வுக்குப் பிறகு அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, கோடீஸ்வரர் மலேசியாவில் தனது முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய மஸ்க்குடன் பேசுவதாக அன்வார் கூறினார். டுவிட்டரின் உரிமையாளரான மஸ்க், இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க சந்திக்கச் சொன்னதாக அன்வார் கூறினார்.