9 வயது மாணவி துஷ்பிரயோகம் ; மாற்றாந்தாய் கைது

9 வயது பெண் பிள்ளையிடம் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதாக மாற்றாந்தாய் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, 30 வயதான தனது மாற்றாந்தாய் தன்னை தாக்கியதாக 9 வயது மாணவி பள்ளி ஆசிரியரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

குறித்த பெண் பிள்ளையின் முதுகில் காயங்கள் இருப்பதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாகவும், இந்தக் காயங்கள் கடினமான பொருளால் தாக்கப்பட்டதால் வந்ததாகவும் நம்பப்படுகிறது என்று, டுங்கூன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் பஹருதீன் அப்துல்லா கூறினார்.

“குறித்த ஆசிரியரிடமிருந்து பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை மேல் சிகிச்சைக்காக டுங்கூன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் முதுகில் 11 அடிகளும், வலது கை மற்றும் தொடையின் இருபுறமும் காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் வீட்டில் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவருக்கு எதிரான சந்தேகநபரின் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவரின் 15 வயது ஊனமுற்ற சகோதரி பார்த்ததாகவும் பஹாருடின் கூறினார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது விளக்கமறியல் நாளையுடன் முடிவடைகிறது,” என்று அவர் கூறினார்

“சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here