பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியா ஆராய்ந்து வருகிறது.
தொழில்நுட்பம், சட்டத்துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள், பொதுமக்களுடன் கலந்தாலோசித்து, வலுவான பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மசோதாவை தயாரிப்பது குறித்து அமைச்சு பரிசீலித்து வருவதாக அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லிஹ் காங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் பரவலான பயன்பாடு காரணமாக, இது செயற்கை நுண்ணறிவு உருவாக்கியது, இது அதன் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று தெரிவிப்பது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், தகவலின் அடிப்படையை அறிந்துகொள்வதற்கும் அவசியம் என்று சாங் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு சட்டம்” என அழைக்கப்படும் இந்தச் சட்டம் கல்வி, நிதி, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த நெறிமுறைக் கேள்விகள், செயலாக்கச் சவால்களுக்குத் தீர்வுகாண வடிவமைக்கப்பட்டுள்ளது.