வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் பாயன் லெப்பாஸ் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக கெராக்கான் கட்சி தலைவர் டத்தோ டொமினிக் லாவ் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொமினிக் லாவின் வேட்புமனுவை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்ற உறுப்பினர்கள் குழு ஒப்புக்கொண்டதாக பெரிக்காத்தான் நேஷனலின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கெராக்கான் கட்சி தலைவர் செனட்டர் டத்தோ டொமினிக் லா ஹோ சாய் பாயன் லெப்பாஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்தார்.
முன்னதாக, குறித்த சட்டமன்ற தொகுதியில் பாஸ் கட்சி போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.