கோல லங்காட்டின் தெலோக் பங்லிமா கராங்கில் உள்ள கம்போங் மேடானில் 20 ஆண் மாணவர்கள் தங்கியிருந்த தஹ்ஃபிஸ் பள்ளி விடுதி, இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. ஹரியான் மெட்ரோ அறிக்கையின்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் தீயில் இருந்து தப்பித்தனர். விடுதி கட்டிடம் 70% அழிந்தது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில், நள்ளிரவுக்குப் பிறகுதான் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு 18 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு நள்ளிரவு 12.55 மணியளவில் தீயை வெற்றிகரமாக அணைத்தனர். எந்தவித காயங்களும் இன்றி 20 பேர் தப்பினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.