ஈப்போ, ஜூலை 31:
தைப்பிங்கில் உள்ள தாமான் பங்லிமா அஸ்ஸாம் கும்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் மரணம் குறித்த ஆரம்ப விசாரணையில், குறித்த சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டதாக தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரஸ்லாம் அப்துல் ஹமீட் கூறினார்.
அதனைத் தொடர்ந்து 36 வயதான சிறுவனின் தாயார் அதே நாளில் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டார் என்றும், குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அவ்விடத்திற்கு வந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் போலீசார் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கு ஆரம்பத்தில் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது.
உயிரிழந்தவர் ஐந்து உடன்பிறப்புகளில் இரண்டாவது பிள்ளை என்று ஏசிபி ரஸ்லாம் கூறினார்.
“குறித்த பெண் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, தன் காதலனுடன் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.