புத்ராஜெயா, ஜூலை 31:
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆறு மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்திய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்று, தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அரசியல் ஸ்திரத்தன்மை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி முதலீட்டை அனுமதிக்கும் அடிப்படை விஷயம் என்றும், அத்தோடு PRN முடிவுகள் மத்திய அளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும், இன்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் பேசியபோது ஃபாஹ்மி கூறினார்.