பி-ஹெய்லிங் நிறுவனங்களைச் சந்திக்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 1:

உணவு மற்றும் பொதி விநியோக நிறுவனங்களின் (பி-ஹைலிங்) பிரதிநிதிகள் வரும் ஆகஸ்ட்டு 8ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஜூலை 22-ம் தேதி பி-ஹெய்லிங் ரைடர்களை சந்தித்த பின்னர், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்காக, அச்சந்திப்பின் தொடர்ச்சியாக பிரதமர் அவர்களை சந்திக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஒற்றுமை அரசாங்கம் எப்போதும் பி-ஹெய்லிங் தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்துகிறது மற்றும் மலேசியா மதானியின் கருத்துக்கு இணங்க பி-ஹெய்லிங் தொழில் வளர்ச்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ளது” என்று போக்குவரத்து அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்டு 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here