முதியோர் பராமரிப்பு மையத்தில் தீ; ஒருவர் பலி

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்டு 1:

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 5/31, பிரிவு 5 இல் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 14 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு என்ஜின்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்என்றும், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர், வான் மட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

“இந்தச் சம்பவத்தின் போது, 69 வயதான உள்ளூர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ​​14 பேர் காயமின்றி தப்பினர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here