கூலிம்:
பாடாங் செராய்யில் இயங்கிவந்த ஒரு பதிவு செய்யப்படாத சமூல நல மையத்தில், முதியவர் ஒருவரை தாக்கிய குற்றசாட்டில், அம்மையத்தின் மேலாளரருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM4,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.விக்னேஸ்வரி, 36, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் தமிழில் வாசிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், அதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜமாலியா அப்துல் மனாப் தண்டனை விதித்தார்.
சுங்கை காரங்கான், தாமான்
டேசா அமானில் உள்ள ஒரு இல்லத்தில், 69 வயதான பி.தர்மலிங்கன் என்பவரை தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றம் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 3 மணியளவில் செய்யப்பட்டதாகவும், விக்னேஸ்வரிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.