60 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கார்; சொற்ப காயங்களுடன் உயிர் பிழைத்த பெண்

ஜாலான் கம்போங் கிவோய், கம்போங் பவாங், தம்பருலி சந்திப்பில் இன்று காலை வாகனம் 60 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. அந்த வாகனத்தை ஓட்டி சென்ற பெண் சொற்ப காயங்களுடன் உயிர்தப்பினார். காலை 9.25 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பெரோடுவா கான்சில் காரை ஓட்டி வந்த ஜூலியானா குன்டோக் (42) என்பவர் உடலில் காயம் அடைந்தார்.

துவாரன் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் அப்துல் காவி அப்துல் கபார் கூறுகையில், காலை 9.27 மணிக்கு தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்தது. அவசர சேவை உதவிப் பிரிவின் (EMRS) இயந்திரம் மற்றும் பயன்பாட்டு வாகனத்துடன் 10 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் சிக்கியிருந்த பெண்ணை கண்டனர். பின்னர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உடலில் காயமடைந்த பாதிக்கப்பட்டவருக்கு மேலதிக சிகிச்சைக்காக துவாரன் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் தீயணைப்பு வீரர்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். பிற்பகல் 2.35 மணியளவில் பணி முடிவடைந்ததோடு சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here