13 வயதான மோட்டார் பந்தய வீரர் உயிரிழந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த 13 வயது மோட்டார் சைக்கிள் வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ், சனிக்கிழமை சென்னைக்கு அருகிலுள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த MRF MMSC FMSCI தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் 2023 இன் மூன்றாவது சுற்றில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சனிக்கிழமை காலை பந்தயம் தொடங்கிய உடனேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. திருப்பம் 1 இல் இருந்து வெளியேறும் போது, ​​ஸ்ரேயாஸ் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் “மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்” (எம்எம்எஸ்சி) ஊடக அறிக்கையில் தெரிவித்தனர்.

காயமடைந்த வீரரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. MMSC வார இறுதியில் திட்டமிடப்பட்ட மீதமுள்ள பந்தயங்களை ரத்து செய்தது. இளமையும் திறமையும் கொண்ட ஒரு வீரரை இழந்தது சோகமானது. தனது அபாரமான பந்தயத் திறமையால் தேசிய அளவிலான பல போட்டிகளில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here