மரம் விழுந்ததில் கர்ப்பிணி என நம்பப்படும் பெண் மரணம்

கோத்த பாரு: தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பயணித்த பெண்ணின் கார் மீது மரம் விழுந்து பலியானார். அப்பெண் கர்ப்பமாக இருந்ததாக நம்பப்படுகிறது. நிக் அமிராவைத் தவிர, வாகனம் ஓட்டிய அவரது கணவர், நிக் முகமது சுல்மி ரம்லி 44, மற்றும் அவர்களது மகள் நிக் ஆயிஷா அஸ்ஸாஹ்ரா ஆகியோரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இவர்களுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் இருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான காரில் இருந்து தீயணைப்பு வீரர்களால் வெளியே கொண்டு வரப்பட்டபோது, நிக் அமிரா தனது இளைய மகளை மடியில் வைத்திருந்தார் என்று தீயணைப்பு மீட்புத் துறையின் தலைவர் முகமட் ரோஸ்லான் ஓமர் கூறினார்.

தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை வெட்டி உயிரிழந்த மூவரையும் வெளியே எடுத்தனர். 10 தீயணைப்பு வீரர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை இரவு 10 மணியளவில் முடிவடைந்தது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here