அரசு ஊழியர்களின் ஊதியத்தை சற்று அதிகரிப்பது குறித்து முயற்சி: அன்வார்

அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது மடானி பட்ஜெட் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை சிறிது உயர்த்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் குறித்த விரிவான ஆய்வு முடியும் வரை இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் என்றார்.

அடுத்த ஆண்டு இந்த ஆலோசனைக்காக காத்திருக்கும் வேளையில், இந்த அக்டோபரில் மடானி பட்ஜெட் மூலம் சம்பளத்தை சிறிது அதிகரிக்க முயற்சிப்பேன் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) ஜியோபார்க் டிஸ்கவரி சென்டரில்  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here