ஒன்பது வயது சிறுவன் கொலை; தாய், அவரது காதலன் மீது குற்றச்சாட்டு

 

தைப்பிங், ஆகஸ்ட்டு 11:

கடந்த மாதம் தனது ஒன்பது வயது மகனைக் கொலை செய்ததாக தாய் மற்றும் அவரது காதலன் மீது மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூர் அதிகா சபாரி முன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட சித்தி ஃபரினா முஹமட் பஷரோல் அரிஃபின், 36, மற்றும் இசுஹைசாத் இஸ்மாயில், 37, ஆகியோர் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.

கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், மாவட்ட நீதிமன்றத்தில் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 30 ஆம் தேதி காலை 10.52 மணி வரை, இங்குள்ள ஜாலான் பங்லிமா 5, தாமான் பங்லிமா அஸ்ஸாம் கும்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் முஹமட் ஹசிஃபைதி முகமட் ஜெஃப்ரி என்ற ஒன்பது வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமானதாக அவர்கள் இருவர் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து படிக்கப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படி விதிக்கப்படும்.

வழக்கை மீண்டும் செவிமடுக்க அக்டோபர் 16 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஜூலை 31 அன்று, அஸ்ஸாம் கும்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஒன்பது வயது சிறுவன் இறந்து கிடந்ததாக முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here