கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 13:
மாநிலத் தேர்தல்களின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில், பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகிய இரண்டும் தங்கள் மாநிலங்களைத் தக்கவைத்துக்கொண்டன.
அதனடிப்படையில் சிலாங்கூருக்கு நாளை விடுமுறையாக இருக்கும் நிலையில், நெகிரி செம்பிலாலிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் பராமரிப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன், இம்மாநில தேர்தலில் PH – BN கூட்டணி வெற்றிபெற்றால், திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
நெக்ரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் PH 17 இடங்களையும், ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் பங்காளியான பாரிசான் நேசனல் 14 இடங்களையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.