கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 13:
நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) மாலை போர்ட் கிள்ளான், பண்டாய் ஆச்சே அருகே ஒரு கப்பலில் தீப்பிடித்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) தெரிவித்துள்ளது.
MV KMTC Shenzen என்ற கப்பல் தீப்பிடித்து எரிவதாக சிலாங்கூர் MMEA க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேற்கு துறைமுகத்திலிருந்து இருந்து இரண்டு இழுவை படகுகள் மற்றும் வடக்கு துறைமுகத்திலிருந்து மற்றொரு படகும் மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டது.
“கப்பலின் சரக்கு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது என்றும், ஆரம்ப நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு இழுவை படகுகளின் நீர் பீரங்கிகளால் நீரைப்பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் “சிலாங்கூர் MMEA இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கப்பலின் ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர். மேலும் அங்குள்ள நிலவரம் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்” என்றும் MMEA தெரிவித்துள்ளது.