வாக்குச் சீட்டு எண்ணிக்கையில் முரண்பாடு: சுங்கை கண்டிஸ் தேர்தல் முடிவு குறித்து போலீசில் புகாரளிக்கப்படும்

 

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 14:

காணாமல் போன வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகளைக் காரணம் காட்டி, பக்காத்தான் ஹராப்பானின் சுங்கை காண்டிஸ் வேட்பாளர் தேர்தல் முடிவு குறித்து மனு தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த சிலாங்கூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தானின் வேட்பாளர் முகமட் ஜவாவி அஹ்மட் முக்னி, பெரிகாத்தான் நேஷனலின் வான் தஜானுரின் அகமட்டுடன் போட்டியிட்டு 167 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

“படிவம் 14 இல் எழுதப்பட்ட காணாமல் போன வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை 1,964 ஆகும், ஆனால் 110 மட்டுமே அதிகாரப்பூர்வ எண்ணாக (காணாமல் போன வாக்குச் சீட்டுகள்) காட்டப்பட்டுள்ளன”.

இதே விஷயம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க MUDA கட்சியும் திட்டமிட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது என்று அவர் கூறினார்.

மேலும் இதில் தேர்தல் தலைமை அதிகாரி தவறான எண்ணை எழுதியுள்ளார்.

“இரண்டாவதாக, வாக்கு சேகரிப்பு மையத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையம் (EC) வேட்பாளர் பிரதிநிதியிடமிருந்து எந்த சரிபார்ப்பையும் பெறவில்லை.

“அத்தோடு வாக்காளர்கள் வாக்குச் சீட்டுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக அதே அதிகாரிக்கு எண்ணும் முகவருக்குத் தெரிவித்தார், இது தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 3 (1) இன் கீழ் குற்றமாகும் ” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட டிக்டோக் வீடியோவில், தேர்தல் தலைமை அதிகாரியிடம் வாக்குச்சீட்டுகள் காணாமல் போனதாகக் கூறப்படுவது குறித்தும், அங்குள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நேர்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்புவதும் காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here