இன்று நண்பகல் திரெங்கானுவில் புதிய மந்திரி பெசார் பதவியேற்கிறார்

கோலா திரெங்கானு, ஆகஸ்ட்டு 15 :

இன்று பிற்பகல் திரெங்கானு மாநில மந்திரி பெசார் மற்றும் சட்டமன்ற (எக்ஸ்கோ) உறுப்பினர்கள் ஆகியோர் திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிசான் ஜைனால் அபிதின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.

மந்திரி பெசார் நியமனத்தை அறிவிக்கும் விழாவும், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் விழாவும் இங்குள்ள Syarqiyah Palace Seri Hall இல் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இருப்பினும், யார் மாநில மந்திரி பெசாராக பதவியேற்பார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், ரெண்டாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் இரண்டாவது முறையாக மானிட்டி பெசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here