தாய் மற்றும் தோழியால் துன்புறுத்தல் ; சிறுவனது நிலையைக் கண்டு மனம் உடைகிறது – ஒன் ஹபீஸ்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்டு 15:

தாய் மற்றும் அவரது வெளிநாட்டு தோழியால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நம்பப்படும் ஏழு வயது சிறுவனை, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி நேற்று சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் (HSI) பார்வையிட்டார்.

“சிறுவனது நிலைமையைக் கண்டு நான் மனம் உடைந்தேன்” என்றும், குழந்தைகளிடம் கொடூரமாக நடந்துகொள்ளும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன் ஹபீஸ் காசி கூறினார்.

“குறித்த சிறுவன் சிகிச்சனியின் பின், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவரது தாத்தா கவனித்துக்கொள்வார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு “சுற்றுச்சூழல் நிலைமையை அறிந்து, உடனே தகவலளித்த பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

அத்தோடு “சம்பந்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற விரைவாக செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் பகிர்வு மூலம் கூறினார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று ஒரு சிறுவன் இரண்டு பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களில் ஒருவர் அவனது சொந்த தாய் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here