சபாவில் 474 மருத்துவ அதிகாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு

கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்டு 19:

சபாவில் கிரேடு UD43 இல் நிரந்தரப் பணியிடங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மொத்தம் 474 ஒப்பந்த மருத்துவ அலுவலர்கள் பணிக்கு வந்துள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் அசிட்ஸ் சன்னா தெரிவித்துள்ளார்.

மருத்துவ அலுவலர்களில் 339 பேர் மருத்துவமனைகளிலும், 135 பேர் சுகாதார கிளினிக்குகளிலும் பணிபுரிவதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில், சபாவிலிருந்து 103 மருத்துவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“எனவே, இப்போது சபாவில் 1,986 மருத்துவ அதிகாரிகள் பணியாற்றுகின்றனர், இதில் 371 அதிகாரிகளின் முன்னரைவிட அதிகமாகவே உள்ளனர் ” என்று அவர் கூறினார்.

அதேநேரத்தில் மாநிலத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்வதில் சுகாதார அமைச்சகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here