சொகுசுக் கார்கள் வாங்கும் பிரபலங்கள் மத்தியில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.

எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார். இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் நகைச்சுவை நடிகர் பாலா.

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது. இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவர் சீரியல் நடிகை ரித்திகா உடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்துள்ளார் மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் ரித்திகா உடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார்.தற்போது பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவருகிறார்.

மேலும் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பலருக்கும் பல நல்லதுகளை செய்து வருகிறார் பாலா.அதன்படி இவர் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை தான் சேமித்து வைத்த காசில் வழங்கியுள்ளார்.ரசிகர்கள் அவரின் நல்ல மனதை வாழ்த்தி வருகின்றனர்.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here