கோலாலம்பூர்: 8,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு வாங்கியதாக, கன்வீனியன்ஸ் ஸ்டோர் சங்கிலி நிறுவனத்தின் மேலாளர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டார். ஆதாரங்களின்படி, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கோலாலம்பூர் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை நிறுவனத்தின் மேலாளரிடம் இருந்து 8,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இது கூடுதல் பொருட்கள் விநியோக வேலை பெற ஒரு ஊக்கம் என்று அவர் கூறினார். சந்தேக நபர் அக்டோபர் 2022 இல் சுபாங் ஜெயா மாவட்டத்தில் இந்தச் செயலைச் செய்ததாக நம்பப்படுகிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கோலாலம்பூர் எம்ஏசிசி இயக்குநர் மொஹமட் ஃபௌசி ஹுசினைத் தொடர்பு கொண்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(A) இன் படி விசாரிக்கப்பட்டது. சந்தேக நபர் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.









