அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சமமான ஒதுக்கீடுகளைப் பெறுவார்கள்- கிளந்தான் மந்திரி பெசார்

கோத்தா பாரு –

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அரசிடமிருந்து சமமான ஒதுக்கீடுகளைப் பெறுவார்கள் என்று கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் தாவூட் உறுதியளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மாநில அரசு நியாயமாக நடத்தும் என்று அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் “பல அரசியல் கட்சிகளிலிருந்து வந்துள்ளபோதும், அத்தோடு அவர்களுக்கென தனியான சித்தாந்தங்கள் இருந்தபோதிலும், அவை தேர்தல்களுடன் முடிந்துவிட்டன. இப்போது எஞ்சியிருப்பது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர்கள்தான், ”என்று, அவர் கூறினார்.

சமீபத்திய நடந்த மாநிலத் தேர்தலில், பாஸ் மற்றும் பெர்சாத்து போட்டியிட்ட 45 தொகுதிகளில், அக்கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள இரண்டு இடங்களை பக்காத்தான் ஹராப்பானின் டாக்டர் ஹஃபிட்சா முஸ்தகிம் (கோத்தா லாமா) மற்றும் பாரிசான் நேசனலின் முகமட் சியாபுதீன் ஹாஷிம் (கலாஸ்) ஆகியோர் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here