பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிடக் குறைவாக, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை விநியோகிப்பாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை கிட்டத்தட்ட 60 காசு குறைந்திருப்பதாக சிலாங்கூரில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறினார். “லாபம் ஈட்டுவதற்காக, விலையைக் குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுகிறோம்,” என்றார் அவர்.
கோழி இறைச்சிக்கான தேவை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விநியோகிப்பாளர்கள் விலையைக் குறைக்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
விநியோகம் அதிகரித்து, தேவை குறைந்தால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விநியோகிப்பாளர்கள் விலையைக் குறைப்பார்கள் என்று மலேசிய கால்நடைப் பண்ணையாளர்கள் சங்கம் கூறியது.
இருப்பினும், பேராக், பினாங்கு போன்ற இடங்களில் கோழி இறைச்சி இன்னும்கூட அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிட அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.