சென்னை: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், முன்னாள் ராணுவ வீரரும் நடிகை வரலட்சுமியின் உதவியாளருமான ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். என்னிடம் என்ஐஏ விசாரிக்க எந்த நோட்டீசும் அனுப்பவில்லை, எனது அம்மாவிடம் மட்டுமே விசாரணை மேற்கொண்டனர்” என வரலட்சுமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


















