ஜோர்ஜ் டவுன்:
டத்தோ லோ சூ கியாங் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மாநில சட்டசபை சபாநாயகராக இன்று பதவியேற்றார்.
“மாநில சபாநாயகராக தனது கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், சட்டசபையின் அனைத்து விதிகளும் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வேன்” என்றும் மாநில பிகேஆர் ஆலோசகருமான அவர் கூறினார்.
இதற்கிடையில், பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் அஜீஸ் மாநில துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
மேலும், 40 பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) மாநில சட்டமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,








