மன அழுத்தம் காரணமாக அறையை பூட்டிக்கொண்ட இந்திய முதியவர்

ராமேஸ்வரி ராஜா

ஊத்தான் மெலிந்தாங் :

மன அழுத்தத்திற்கு ஆளான 68 வயது இந்திய முதியார் வீட்டின் ஒரு அறையில் தன்னை பூட்டிக்கொண்டார். வெளியே வராததையடுத்து, அவரை ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்ப்புப் படையினர் கதவை உடைத்து அறையிலிருந்து வெளியேற்றினர்.

இச்சம்பவம் இன்று ஊத்தான் மெலிந்தாங் லோரோங் நாயுடு சிம்பாங் அம்பாட்டில் மாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. மீட்க்கப்பட்ட முதியவர் பின்னர் சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என தீயணைப்பு மீட்ப்புபணி பேச்சாளர் செய்தியாளருக்கு வழங்கிய அறிக்கையில்  தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here