மூன்று ஊழல் குற்றச்சாட்டிலிருந்து புங் மொக்தார் ராடினும் அவரது துணைவியாரும் விடுவிப்பு

கோலாலம்பூர்:

2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊழல் வழக்கில் மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து புங் மொக்தார் ராடின் மற்றும் அவரது துணைவியாரும் இன்று உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

கடந்தாண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தால் தற்காப்பு வாதம் புரிய உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவாதத்தை மீண்டும் பரிசீலிக்க, கினாபாடங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பங் மொக்தார் மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஜிஸி இசெட் அப்துல் சமட் ஆகியோர் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹமிட் விடுவித்துத் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு 2.2 மில்லியன் ரிங்கிட், கூடுதலாக 262,500 ரிங்கிட் பணம் ஊழல் பெற்றதாக அவருக்கு எதிராக இரு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

PUBLIC MUTUAL அதிகாரியிடமிருந்து அவர் இந்த ஊழல் குற்றத்தை புரிந்தார். மேலும், 337,500 ரிங்கிட் ஊழல் பணத்தைப் பெற்றதாகவும் அவர் மீது இன்னொரு ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here