வாய் தகராறு கொலையில் முடிந்த துயரம்

சாலையோர வியாபாரி ஒருவர் வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்தது. நேற்று (செப்டம்பர் 12) மாலை 4 மணியளவில் தைப்பிங்கின் போகோக் அஸ்ஸாமில் உள்ள சந்தையில் இந்த சம்பவம் நடந்ததாக சைனா பிரஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் அறிமுகமானவர்களுக்கு ‘ஆ குன்’ என்று அழைக்கப்பட்டார், வாழைப்பழ பலகாரத்தை தனது கைகளைப் பயன்படுத்தி தொட்டதாக கூறப்படும் வாடிக்கையாளருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, அங்கு ‘ஆ குன்’ சந்தைக்கு அருகிலுள்ள ஒரு பக்க சந்துக்குள் துரத்தப்பட்டார். வாடிக்கையாளரும் அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்  கடையை உடைக்கத் தொடங்கினார்.

வாடிக்கையாளர் அங்கிருந்து புறப்பட்டதை பார்த்ததும், ‘ஆ குன்’ தனது கடைக்கு திரும்பிச் சென்று வந்த கடையை சுத்தம் செய்ய தொடங்கினார். இருப்பினும், வாடிக்கையாளர் திரும்பி வந்து, தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதற்கு முன், மரக் குச்சியை கொண்டு  ஆ குன்னை தலையின் பின்புறத்தில் தாக்கினார். இந்த தாக்குதலில் ஆ குன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் 49 வயதுடைய சந்தேக நபரை குடியிருப்பு பகுதியில் வைத்து கைது செய்த போலீசார் அவரை இன்று தைப்பிங் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். சந்தேக நபர் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்தார் மற்றும் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here