கோத்த கினபாலு கம்போங் புளூட்டனில் 6 வீடுகள் எரிந்த தீ விபத்தில் இரண்டு உடன்பிறப்புகள் இறந்து கிடந்தனர். மதியம் 1 மணியளவில் நடந்த சம்பவத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைத்த பிறகு பாதிக்கப்பட்ட ஜெய்ரையன் ஜாப்ரி 5, மற்றும் அவரது சகோதரர் ஜாக்ரோன் 6, ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
லிண்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் அகஸ்தாவியா ஜோ குவாசி கூறுகையில், மதியம் 1:03 மணிக்கு தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. தீ விபத்தில் ஆறு அரை நிரந்தர வீடுகளை பாதித்தது. அவை பகுதியளவில் சேதமடைந்தன. இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர் என்று அவர் கூறினார். பின்னர் அவர்களின் உடல்கள் அகற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. பிற்பகல் 2.53 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.