அலோர் ஸ்டார்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 குடும்பங்களைச் சேர்ந்த 1,383 பேராகக் குறைந்துள்ளது.
இது நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,550 பேராக இருந்தது .
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் சேனா மற்றும் பாலிங் ஆகிய நான்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 12 தற்காலிக நிவாரண மையங்கள் இன்னமும் இயங்குவதாக கெடா சிவில் பாதுகாப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகத் தலைவர் மேஜர் (பிஏ) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.
இன்று சற்று வானிலை மேம்பட்டதால், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளதால், சில குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதித்க்கப்பட்டனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.