கோல்ஃப் கிளப்பில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக இரண்டு ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை

மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ‏21 வயது caddie பெண்ணிடம்  தவறாக நடந்து கொண்டதாக செய்த போலீஸ் புகாரின் பேரில் இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மலாக்காவின் உயர் போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

தண்டனைச் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் துணைத் தளபதி டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார். இரண்டு அதிகாரிகளும் முறையே 52 மற்றும் 51 வயதுடையவர்கள், நெகிரி செம்பிலானில் உள்ள இராணுவ முகாமில் உள்ளனர்.

அக்டோபர் 5 ஆம் தேதி அந்தப் பெண்ணால் காவல்துறை புகார் அளிக்கப்பட்டதாகவும், மறுநாள் வாக்குமூலம் அளிக்க அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த பெண்ணின் 35 வயது சக ஊழியரும் இந்த சம்பவத்தை   பார்த்ததாக காவல்துறையில் புகார் அளித்ததாக டிசிபி ஜைனோல் கூறினார்.

பெண் கூறியதை மறுத்து இரண்டு அதிகாரிகளும் புகார் அளித்துள்ளனர் என்று அவர் திங்கள்கிழமை (அக். 9) கூறினார். விசாரணை நடந்து வருவதாகவும், அதன் முடிவு துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் டிசிபி ஜைனோல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here