கிள்ளான்: ஞாயிற்றுக்கிழமை (அக். 15) அதிகாலை மரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விரைவுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். பல பயணிகள் காயமடைந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இங்குள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனை அருகே விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் ஓட்டுநர் மற்றும் அவரது துணை ஓட்டுநர் உட்பட 6 பேர் இருந்தனர். விபத்தைத் தொடர்ந்து 49 வயதான பேருந்து ஓட்டுநர் தனது வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொருவரின் வலது கால் உடைந்தது. பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் இருவர் கிள்ளான் சென்ட்ரல் பேருந்து முனையத்திற்கு அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்ட மற்றொருவர் அறிமுகமானவர் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறினார்.